தமிழகத்தில் வாட்டர்பெல் திட்டம்.. மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் அவசியம் அறிவோமா!

29-ஜூன்-2025

பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலின் தாக்கம் மற்றும் விளையாட்டு நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற சாத்தியங்கள் உள்ளன.

29-ஜூன்-2025

அவர்களுக்கு நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு வரக்கூடும். இதனால் கவனமின்மை அதிகரிக்கும்.

29-ஜூன்-2025

மேலும் நீர்ச்சத்து இழப்பால் சிறுநீர் தொற்று வரும், மலச்சிக்கல் கூட ஏற்படும். பதின்பருவத்தினருக்கு அதிகளவில் முகப்பருக்கள் தோன்றும்.

29-ஜூன்-2025

அதனால் மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

29-ஜூன்-2025

வகுப்பறை நடவடிக்கைகளை பாதிக்காமல், தினமும் மூன்று முறை, காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என வாட்டர் பெல் அடிக்கப்படும்.

29-ஜூன்-2025

ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க, 5 நிமிட இடைவேளையும் வழங்கப்படுகிறது.

29-ஜூன்-2025

குறிப்பாக பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

29-ஜூன்-2025