முருகப்பெருமான் அவதரித்த நாள்... வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்?

22-மே-2024

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

22-மே-2024

ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசி மாதத்து விசாகநாள் ஆகும்.

22-மே-2024

வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

22-மே-2024

இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்யலாம்.

22-மே-2024

இதனால், மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

22-மே-2024

அதேவேளையில் இந்த வைகாசி விசாக தினம், எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இன்று விரதமிருந்து வழிபாடு செய்தால் முருகனின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

22-மே-2024

திருச்செந்தூர், பழநி உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

22-மே-2024