விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

04-மே-2024

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

04-மே-2024

பின் அவரது உடல் தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

04-மே-2024

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

04-மே-2024

மேலும் அவரின் நினைவிடத்தில் தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

04-மே-2024

அவரது நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

04-மே-2024

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு 'லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

04-மே-2024

பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக, விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04-மே-2024