/JAYACHANDRAN RAMAKRISHNAN அவரது கருத்துக்கள்
JAYACHANDRAN RAMAKRISHNAN ( 1643 )

காலம் காலமாக நமது பஞ்சாங்கத்தின் நேரம் மாற்றம் இல்லாமல் கணக்கிடப்படுகிறது.


இது போன்று பல பிரச்சனைகளை உலக மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று தான் அன்றே மாண்புமிகு மதிப்பிற்குரிய திரு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்டார். யாரும் கொடுக்கவில்லை. இப்போது திரு டிரம்ப் உலக அமைதியை கெடுக்கும் செயலில் இறங்கி விட்டார். இவருக்கும் நமது தமிழக சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும் ஒரு வித்தியாசம் இல்லை. ஸ்டாலின் எப்படி ஆட்சியில் இருக்கும் போதும் இல்லாத போதும் அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருப்பாரோ அதேபோல் டிரம்ப் இனி உலக அமைதிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு தான் இருப்பார்.


தவெக திமுக வால் உருவாக்கப்பட்ட கட்சி அதனை திமுக தலைமை கழகம் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல இருந்து வழி நடத்தி கொள்ளும். பிற்காலத்தில் அது திமுகவோடு இணைக்கப்படப்போகும் கட்சி. ஆகவே அதை பற்றி திமுகவினர் அதிகமாக கவலைப்பட வேண்டியது இல்லை. அதிமுக சினிமா காரன் அதாவது திமுகவின் பங்காளி கட்சியாக இருந்தாலும் தற்போதைய அதிமுக தலைவர்கள் சினிமா துறைக்கு சம்பந்தம் இல்லாததால் அவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் பாஜகவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் திமுக அகில இந்திய அளவில் பிரபலம் ஆகும் என்பதாலும் மோடியை எதிர்ப்பதன் மூலம் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கு இணையாக வைத்து பார்க்கப்படுவார்கள் என்பதாலும் அதிமுகவை பாஜகவின் பின்னணியில் எதிர்ப்பதும் திமுக உத்தி. மேலும் ஸ்டாலின் தலைக்கணம் காரணமாக பழனிச்சாமியை தனக்கு இணையாக முதல்வராக வைத்து பார்க்க ஸ்டாலின் கெளரவம் இடம் கொடுக்கவில்லை. ஒரு வேளை எல்லா கணக்குகளும் தப்பிப் போய் அதிமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தாலும் ஸ்டாலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பழனிச்சாமியை நிம்மதியாக முதல்வராக விட மாட்டார். தனது கட்சியில் உள்ள வேலையில்லா வக்கீல்கள் அரசு ஊழியர்கள் கொண்டு அவருக்கு பல்வேறு விதங்களில் தினம் தினம் தொந்தரவு தருவார். ஆகவே அதிமுக இதை மனதில் வைத்து பாஜகவை தோழமை உணர்வுடன் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கொண்டு சென்றால் மட்டுமே அதிமுக தப்பி பிழைக்கக்கும். இல்லை என்றால் இடைத்தேர்தல் நிச்சயம் நடக்கும். அப்படி இடைத் தேர்தல் நடந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் கனவுத் திட்டம் நிறைவேறிவிடும். ஆகவே சென்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் எம்பி தேர்தல்களில் அதிமுகவின் சிலர் திமுகவிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு தங்கள் சுயநலத்திற்காக திமுகவை வெற்றி பெற வைத்து கொங்கு மண்டல திமுக தலைவர் ஒருவரை பெரிய தலைவர் ஆக்கியது போல இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டு முழு மனதுடன் அதிமுகவின் வெற்றிக்கு வேலை செய்தால் மட்டுமே அதிமுக உயிருடன் இருக்கும். இல்லை என்றால் இன்றைய காங்கிரஸ் கட்சி நிலமை தான் அதிமுகவின் எதிர் காலமாக இருக்கும்.


நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த இங்கிலாந்து இப்போது அதன் வரி வருவாயில் பெரிதும் நம்பி இருப்பது டாடா நிறுவனங்களை தான். இங்கிலாந்தின் வரி வருவாயில் பெரும் பங்கு டாடா நிறுவனங்கள் இடம் இருந்து வருகிறது. தேசத்தை நேசிக்கும் சிந்திக்கும் தலைவர்கள் இருந்தால் வரலாறு திரும்பும். அப்துல் கலாம் இந்தியா 2020 வல்லரசு ஆக வேண்டும் என்றார் ஆனால் 2047ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும். எனக்கு ஒரு வருத்தம் அதை பார்பதற்கு நான் இருக்க மாட்டேன்.


கேரளாவின் பெயர் மாற்றம் போல தமிழ் நாடு பெயரையும் தமிழகம் என மாற்ற வேண்டும். அகம் என்பது பழந்தமிழர் வாழ்வியலில் உள்ளம், மனம், அல்லது உள்புறம் என்று பொருள்படும். குறிப்பாக, தலைவன்-தலைவிக்கிடையேயான காதல், இல்லற வாழ்க்கை, மற்றும் உள்ளத்து உணர்ச்சிகளைப் பற்றிப் பேசும் இலக்கியப் பகுதி அகப்பொருள் அகம் ஆகும். இது புறம் வீரம், போர், பொதுவாழ்க்கை என்பதிலிருந்து வேறுபட்டு, வெளியுலகிற்குத் தெரியாத மன உணர்வுகளைக் குறிக்கும். அகம் என்பது வாழ்வின் அக-உணர்வுகளையும் காதலையும் குறிக்கும் ஒரு முக்கியமான தமிழிலக்கண மற்றும் இலக்கியக் கருத்தாக்கமாகும். ஆகவே தமிழ் நாடு என்பதையும் தமிழகம் என மாற்ற வேண்டும்.


தவெக திமுக வால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. மநீமை போல தவெகவும் திமுகாவோடு இணைந்து விடும். இனம் இனத்தோடு சேர்ந்து விடும் என்பது போல சினிமாக்காரர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.


ஸ்டாலின் பிரதமர் ஆனால் கமல்ஹாசன் ஜனாதிபதி. நிதியமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உதவி ஜனாதிபதி ஜோசப் விஜய். கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்.


ஏற்கனவே தமிழகத்தில் ஒரு முன்னாள் பிரதமர் பலி கொடுக்கப்பட்டு உள்ளார்.



கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் கோவில் கல் தூண்கள் உள்ளது.


அங்காவது ஐந்து ஆண்டுகளில் தண்டனை வழங்கப் பட்டது. இதே தமிழகத்தில் நடந்திருந்தால் குழந்தைகள் மீது தான் தவறு என்று சொல்லி எப்ஐஆர் மாற்றி போட்டிருப்பார்கள்.


Advertisement Tariff