Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நெகமம் பேரூராட்சி தலைவர் மீது வழக்கு

நெகமம் பேரூராட்சி தலைவர் மீது வழக்கு

நெகமம் பேரூராட்சி தலைவர் மீது வழக்கு

நெகமம் பேரூராட்சி தலைவர் மீது வழக்கு

ADDED : அக் 14, 2011 01:18 AM


Google News
நெகமம் : நிலம் விற்கப்பட்ட பிரச்னையில் நெகமம் பேரூராட்சி தலைவர் மீது போலீசார் வழக்கு விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை அடுத்த கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமியின் மகன் சுப்பிரமணியன்; பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியம்(48), இவரது சகோதரர் லட்சுமிநரசிம்மகுப்தா(44) ஆகியோருக்கு நெகமம் கார் ஸ்டேண்ட் பின்புறம் உள்ள 25 சென்ட் காலியிடம் கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடம் குறித்து உடுமலை சார்பு நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று சுப்பிரமணியன், நெகமம் பேரூராட்சித் தலைவர் சபரிகார்த்திகேயன் மற்றும் சிலர் கார் ஸ்டேண்ட் பின்புறம் உள்ள காலியிடத்தில் முருங்கை நாத்து வைக்க வந்தனர். தகவல் அறிந்த வெங்கடசுப்பிரமணியம், இவரது மகன் ஹரிபிரசாத்(22), லட்சுமிநரசிம்மகுப்தா சென்று எங்களுக்கு சொந்தமான இடத்தில், முருங்கை நாத்து வைக்ககூடாது என கூறினார். இச்சம்பவத்தில் வெங்கடசுப்பிரமணியம், ஹரிபிரசாத், லட்சுமிநரசிம்மகுப்தாவை தாக்கியுள்ளனர். மூவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இச்சம்பவத்தையடுத்து, நெகமம் போலீசார் சுப்பிரமணியன், சபரி மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், சுப்பிரமணியமும், வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us