/உள்ளூர் செய்திகள்/மதுரை/வரும் வராத மனுநீதி நாள் முகாம்அழகர்கோவில்,வரும் வராத மனுநீதி நாள் முகாம்அழகர்கோவில்,
வரும் வராத மனுநீதி நாள் முகாம்அழகர்கோவில்,
வரும் வராத மனுநீதி நாள் முகாம்அழகர்கோவில்,
வரும் வராத மனுநீதி நாள் முகாம்அழகர்கோவில்,
ADDED : ஜூலை 23, 2011 01:20 AM
மதுரை வடக்கு தாலுகா கள்ளந்திரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கள்ளந்திரி, 1,2, மாங்குளம் 1, 2, மீனாட்சிபுரம் 1, 2, பிட்கள் மற்றும் பொய்கைகரைப்பட்டி உட்பட ஏழு கிராம அலுவலகங்கள் உள்ளன. இதில் ஐந்து ஊராட்சிகளில் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வருவாய் துறையினர் சார்பில் கிராமங்களில் நடக்கும் மனுநீதி நாள் முகாமில் இலவச பட்டா கோருதல், பட்டா மாறுதல் என பொதுமக்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் வழங்கப்படும்.
நேற்று கள்ளந்திரியில் மனுநீதி நாள் முகாம் நடப்பதாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு இதுபற்றி தெரிவிக்கவில்லை. நேற்று காலை அதிகாரிகள் வந்து பல மணி நேரம் ஆகியும் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அரசியல் வாதி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஏழு பேர் மட்டுமே வந்து மனு கொடுத்தனர்.


