/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சின்னநெகமத்தில் வேளாண் கருத்தரங்கம்சின்னநெகமத்தில் வேளாண் கருத்தரங்கம்
சின்னநெகமத்தில் வேளாண் கருத்தரங்கம்
சின்னநெகமத்தில் வேளாண் கருத்தரங்கம்
சின்னநெகமத்தில் வேளாண் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
நெகமம் : ஆனைமலை அடுத்த வாணவராயர் வேளாண்மை கல்லூரியும், சின்னநெகமம் உழவர் மன்றமும் இணைந்து விவசாய கருத்தரங்கை சின்னநெகமத்தில் நடத்தியது.
சின்னநெகமம் சமுதாய நலக்கூடத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடந்த விவசாய கருத்தரங்கிற்கு ஊராட்சி தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார்.வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் உழவியல் துறை பேராசிரியர் முகமது அமானுல்லா மதானி, தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியை வசுமதி, பூச்சியியல் துறை உதவி பேராசிரியை மஞ்சுளா, நோயியல் துறையின் உதவி பேராசிரியர் கார்த்திகேயன், வணிகவியல் துறையின் பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.


