/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காதலியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குகாதலியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 09, 2011 02:43 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகள் தேவிகா, 22.
அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜேஷ், 26. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி தேவிகாவுடன் ராஜேஷ் நெருங்கி பழகினார். பின்னர் தேவிகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு மறுத்த ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து தேவிகா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷை தேடி வருகின்றனர்.


