Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புத்தக வினியோகத்திற்கு நிதி ஒதுக்காததால் : அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

புத்தக வினியோகத்திற்கு நிதி ஒதுக்காததால் : அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

புத்தக வினியோகத்திற்கு நிதி ஒதுக்காததால் : அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

புத்தக வினியோகத்திற்கு நிதி ஒதுக்காததால் : அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

ADDED : செப் 07, 2011 12:18 AM


Google News
அன்னூர் : புத்தகங்களை கோவை குடோனிலிருந்து வட்டார கல்வி அலுவலகம் கொண்டு செல்லவும், அங்கிருந்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லவும் அரசு நிதி ஒதுக்காததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: அன்னூர் ஒன்றியத்தில் 75 துவக்கப்பள்ளிகளும், 16 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

இதில் 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமச்சீர் பாடப்புத்தகங்களை, கோவை ஒண்டிப்புதூரில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவன குடோனிலிருந்து எடுத்து வர அரசு நிதி ஒதுக்கவில்லை. எனவே, ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிகளில் இருந்தும் தலா 100 ரூபாயும், துவக்கப்பள்ளிகள் சார்பில் தலா 50 ரூபாயும் கொடுத்து, அங்கிருந்து வட்டார அலுவலகத்திற்கு புத்தகங்கள் எடுத்து வந்தோம். அதன்பின் அங்கிருந்து 10 முதல் 15 கி.மீ., தொலைவில் உள்ள எங்கள் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இரண்டு முறை சரக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து புத்தகங்களை எடுத்துச் சென்றோம். ஒரு முறைக்கு சரக்கு ஆட்டோவுக்கு தூரத்தை பொறுத்து 300 ரூபாய் வீதம், இரண்டு முறைக்கு 600 ரூபாய் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது. பள்ளியில் பராமரிப்பு பணி செய்ய நிதி ஒதுக்குவதில்லை என்பதால் நாங்கள் சொந்த செலவில் தூய்மை மற்றும் துப்புரவு பணி செய்து வருகிறோம். இத்துடன் புத்தக வினியோகத்திற்கும் செலவு செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us