ADDED : செப் 08, 2011 03:04 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி ஒத்தகுதிரை வெங்கடேஸ்வரா ஹை டெக் பொறியியல்
கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா
நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா
பேசுகையில், ''வாழ்க்கையில் 17 முதல் 25 வயது வரை உள்ள காலத்தில் நமது
பழக்கம், செய்யும் செயல் ஆகியவை வாழ்க்கை முழுவதும் தொடரும்.
ஆதலால்,
கவனமாக ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். மொபைல் ஃபோன், வீடியோ கேம்
ஆகியவற்றில் நேரத்தை வீணடிக்காதீர்கள்,'' என்றார். கல்லூரி செயலாளர்
கருப்பணன், தலைவர் வெங்கடாசலம், துணை செயலாளர் கெட்டிமுத்து, முதல்வர்
தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.ஓணம்
திருவிழா: கல்லூரி சார்பில் நடந்த ஓணம் விழாவில், கல்லூரி வளாகத்தில்
மாணவியர் அத்தப்பூ கோலமிட்டனர். மகாபலி வேடமணிந்த மாணவன் தலைமையில், மாணவ,
மாணவியர் பேரணி நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
'சக்தி குருப் கம்பெனி' பொது மேலாளர் நடராஜன் பரிசு வழங்கினார்.


