ADDED : அக் 07, 2011 10:17 PM
பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் தேர்தலை சந்திக்கிறது ஒட்டன்சத்திரம் நகராட்சி.
இங்கு 7 வது வார்டில், தம்பி மனைவி சித்ராவை (தி.மு.க.,) எதிர்கொள்கிறார், அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் முருகன்.
இருவருக்கும் இடையே 'நீயா நானா' போட்டி அலையடிக்கிறது. இவர்கள் மோதிக் கொள்வதால், உறவினர்கள் தர்மசங்கடத்தில் தவிக்கின்றனர். 'ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டால், அடுத்தவர் கோபித்து கொள்வார். கட்சி ரீதியாக செயல்படவும் முடியவில்லை. யாருக்கு ஓட்டுப் போடுவது?' என, ரகசிய பட்டிமன்றமே நடத்தி வருகின்றன, உறவுகள். 'யார் கெட்டிக்காரரோ, அவர் கரை சேரட்டும். நமக்கேன் வம்பு. மொத்தத்தில், இரண்டு கட்சியும் சேர்ந்து உறவுகளை உரச வைத்து விட்டன ,' என, மவுனம் காத்து வருகின்றன சில 'நெருக்கங்கள்'.


