கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
கடலூர் : கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
முதல் கட்டமாக வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் நான்கு பக்கமும் கண்காணிப்பு கேமரா சோதனை ஓட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. கேமராவின் செயல்பாடுகளை எஸ்.பி., பகலவன் நேற்று பார்வையிட்டு விளக்கங்களைக் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., வனிதா, இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலு, ராமதாஸ், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, திருவேங்கடம், விசுவநாதன் மற்றும் கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் குழு உடனிருந்தனர். இந்த கண்காணிப்பு கேமராவில் லாரன்ஸ் ரோட்டில் 100 மீ., கூத்தப்பாக்கம் ரோடு, தேரடித் தெரு, வண்டிப்பாளையம் ரோட்டில் 15 மீ., தூரம் வரை நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யக் கூடியது. மூன்று நாட்கள் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் 'ஸ்பீடு டூம்' (சுற்றும் கேமரா) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.