Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

UPDATED : அக் 12, 2011 09:26 AMADDED : அக் 12, 2011 02:32 AM


Google News
மதுரை: மதுரையி்ல்பெண் ‌போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் நெற்றில் சுட்டு தற்‌கொலை செய்து கொண்டார்.

மதுரை ஆயுதப்படை ‌பரிவில் பணிபுரிந்து வருபவர் மீனாட்சி,29. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு பணியில் நள்ளிரவு 1 .45 மணியளவில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்‌கொலை செய்து கொண்ட மீனாட்சி எழுதிய கடிதத்தில் எனக்கு தீராத தலைவலி, பணி்ச்சுமை , குடும்பச்சுமை காரணமாக இந்த முடிவிற்கு வந்தேன். வேறு எந்தவிதமான கதைகள், என்மீது கூறவேண்டாம்.முடிந்தால் என் உடல் உறுப்புகளை மற்‌றவர்களுக்கு தானம் கொடுங்கள். கடவுள் கொடுத்த இந்த உயிரை எடுக்க எனக்கு உரிமையில்லை. இறைவா என்னை மன்னித்துவிடு. என்னுடைய முடிவுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. இவ்வாறு அந்த கடித்ததி்ல் தெரிவித்துள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us