/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆஸ்திரேலியா முதல் ராமநாதபுரம் வரை36 மணிநேரம் "நான் ஸ்டாப்' பயணம்ஆஸ்திரேலியா முதல் ராமநாதபுரம் வரை36 மணிநேரம் "நான் ஸ்டாப்' பயணம்
ஆஸ்திரேலியா முதல் ராமநாதபுரம் வரை36 மணிநேரம் "நான் ஸ்டாப்' பயணம்
ஆஸ்திரேலியா முதல் ராமநாதபுரம் வரை36 மணிநேரம் "நான் ஸ்டாப்' பயணம்
ஆஸ்திரேலியா முதல் ராமநாதபுரம் வரை36 மணிநேரம் "நான் ஸ்டாப்' பயணம்
ADDED : செப் 04, 2011 10:30 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று சரணாலயங்கள் மட்டுமே இருந்த
நிலையில், இந்தாண்டு புதிதாக உருவாகியிருக்கும் தேத்தங்கால் சரணாலயம்,
வெளிநாட்டு பறவைகள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ராமநாதபுரம்
மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, மேல செல்வனூர், கீழ செல்வனூர்
ஆகிய சரணாலயங்கள் உள்ளன. பிளமிங்கோ, முக்குளிப்பான், சாம்பல் நாரை,
குருட்டு நாரை, மஞ்சள் மூக்கு நாரை ஆகிய பறவைகள் ஆஸ்திரேலியா,
சைபீரியாவிலிருந்து வருகின்றன. இவை 36 மணி நேரம் 'நான் ஸ்டாப்' ஆக பறந்து
வருகின்றன.
இதற்கு ஏற்ற சக்தியை முன்பே பெருக்கிக் கொள்கின்றன. வயிற்றில்
முட்டையுடன் வரும் இவை, வந்த இரண்டு நாளில் கூடு கட்டி, முட்டையிடுகின்றன.
25 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றன. அக்டோபர் கடைசி, நவம்பர், டிசம்பரில்
வரும் பறவைகள், அடுத்தாண்டு மே, ஜூன், ஜூலையில் கிளம்ப ஆரம்பிக்கும்.
அதற்குள் இரு முறை முட்டையிட்டு இனத்தை விருத்தி செய்கின்றன.
கடந்த முறை சித்திரங்குடி சரணாலயத்தில் மூன்று முறை முட்டையிட்ட பறவைகள்
தங்கள் நாட்டிற்கு திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டன. தற்போது புதிய
சரணாலயமாக உருவெடுத்துள் தேத்தங்கால் சரணாலயத்துக்கு பறவைகள் புதிதாக வர
உள்ளன. இதையொட்டி அவற்றுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளில் அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர்.


