ADDED : செப் 06, 2011 12:47 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் மைத்துனரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் தங்கமணி மகன் வடிவேல்ராஜ் என்ற கண்ணன்(35). இவர் தீப்பெட்டி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடிவேல்ராஜ் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த அவரது மைத்துனரான புதியம்புத்தூர் ஜெயம் மகன் முருகேசன்(32) வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வடிவேல்ராஜை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடிவேல்ராஜ் கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் முருகேசனை கைது செய்ததுடன், அவருடன் வந்ததாக புதியம்புத்தூர் சுப்பிரமணியன் மகன் ராஜ்குமார்(22) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


