காரைக்குடி:விவசாயிகளுக்கான சொட்டு நீர் பாசன பயிற்சி முகாம்
பிள்ளையார்பட்டியில் நடந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உழவர் பயிற்சி மைய
இயக்குனர் குமரேசன் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் வனராஜ், சொட்டு
நீர் பாசனத்தின் நோக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார். கரும்பு,
வாழை, காய்கறி பயிர்கள், தென்னை, பழமரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம்
கிடைக்கும் பலன்கள் குறித்து பயிற்சி அளித்தனர். உதவி பொறியாளர்கள் நவ,
பாலசுப்பிரமணியன், முருகன், லோகிநாதன் பங்கேற்றனர்.


