Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்

அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்

அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்

அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்

ADDED : ஆக 07, 2011 02:06 AM


Google News

மேட்டுப்பாளையம் : ''கடைக்கோடியில் உள்ள ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில், அரசு கேபிள் 'டிவி' திட்டத்தை கொண்டுவரும்,'' என, தமிழக அரசு கேபிள் 'டிவி' வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ் வரவேற்றார். தமிழக அரசு கேபிள் 'டிவி' வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் கஷ்டங்களை நன்கு அறிவேன். முதல்வர் ஜெயலலிதா உங்களை எப்படி பாதுகாக்க நினைக்கிறாரோ, அதுபோல் நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் கடைக்கோடியில் உள்ள ஆபரேட்டர்கள் காப்பாற்றப்படும் வகையில் இருக்கும். இது வரை நடந்த கலந்தாய்வு கூட்டங்களில் அரசு கேபிள் 'டிவி'க்கு அனைவரின் ஆதரவு அமோகமாக உள்ளது.



இதில் சேர்வதற்கு ஆர்வமாக வருகின்றனர். அரசின் கன்ட்ரோல் ரூம் அமைத்த பிறகு தான், உள்ளூர் தனியார் சேனல்கள் பற்றி தீர்மானிக்கப்படும். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.இவ்வாறு, வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். ஆபரேட்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அவினாசி, அன்னூர், சோமனூர், கருமத்தம்பட்டி, புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்களும், எம்.எல்.ஏ., மலரவன், ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் வான்மதி சேட் உட்பட பலர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் சங்க செயலாளர் மீரான் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us