Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் "பூத் சிலிப்' வாங்க இன்று சிறப்பு முகாம்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் "பூத் சிலிப்' வாங்க இன்று சிறப்பு முகாம்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் "பூத் சிலிப்' வாங்க இன்று சிறப்பு முகாம்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் "பூத் சிலிப்' வாங்க இன்று சிறப்பு முகாம்

ADDED : அக் 11, 2011 02:24 AM


Google News
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயஸ்ரீமுரளிதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:அக்டோபர் 13ம் தேதி திருச்சி மேற்கு தொகுதிக்கான (140) இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகிய இரு ஆவணங்களை மட்டுமே பயன்படுத்தி வாக்களிக்க இயலும். ரேஷன் கார்டு உள்ளிட்ட வேறு ஆவணங்கள் ஏதும் பயன்படுத்தி வாக்களிக்க இயலாது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் கடந்த 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் வழங்கப்பட்டது. பூத் சிலிப் கிடைக்காத வாக்காளர்களுக்காக இன்று அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூத் சிலிப்பை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்துவது குறித்தான இறுதி பயிற்சி வகுப்பு நாளை நடக்கிறது. இதுகுறித்து மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத் அறிக்கை: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்துவது குறித்தான இறுதி பயிற்சி வகுப்பு அக்டோபர் 12ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தெப்பக்குளம், பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அனைத்து ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 1, 2, 3 மற்றும் 2பி ஆகியோருக்காக நடக்கிறது. பயிற்சியின் போது அனைத்து ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும் 'சிம்' கார்டு மற்றும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் தாங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி பணியிடம் குறித்தான உத்தரவு வழங்கப்படும்.எனவே, அதனத்து ஓட்டுப்பதிவு அலுவலர்களும் இறுதி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து ஓட்டுப்பதிவு அலுவலர்களும் 12ம் தேதி மதியம் 2 மணிக்கு அந்தந்த ஓட்டுப்பதிவு மையத்தில்ஆஜராக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us