/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனுஉள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனு
ADDED : செப் 09, 2011 01:39 AM
தென்காசி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜ.,வினரிடம்
இருந்து விருப்ப மனு பெறுவது துவங்கியது.
நெல்லை மேற்கு மாவட்ட
பா.ஜ.,சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி
நிர்வாகிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி
பாவூர்சத்திரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் துவங்கியது. தொடர்ந்து வரும்
13ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படுகிறது. நகராட்சி தலைவர்
பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், நகராட்சி கவுன்சிலருக்கு 250 ரூபாயும்,
டவுன் பஞ்.,தலைவருக்கு 500 ரூபாயும், டவுன் பஞ்.,கவுன்சிலருக்கு 100
ரூபாயும், மாவட்ட பஞ்.,கவுன்சிலருக்கு ஆயிரம் ரூபாயும், யூனியன்
கவுன்சிலருக்கு 250 ரூபாயும், பஞ்., தலைவருக்கு 250 ரூபாயும்,
பஞ்.,கவுன்சிலருக்கு 100 ரூபாயும் கட்டணமாக மனுவுடன் வசூலிக்கப்படுகிறது.
இத்தகவலை மாவட்ட தலைவர் பாண்டித்துரை தெரிவித்தார்.


