Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது

"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது

"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது

"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது

ADDED : செப் 16, 2011 01:32 AM


Google News

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே நடந்த தச்சுத் தொழிலாளி கொலை வழக்கில், இரு வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர்.

'ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்செங்கோடு அருகே சூரிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி தங்கராஜ் (29). கடந்த, 9ம் தேதி வேலைக்கு சென்ற தங்கராஜ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மறுநாள் காலை, மல்லசமுத்திரம் அருகே உள்ள உப்புக்கரடு பெருமாள் கோவில் அடிவாரத்தில், தங்கராஜ் தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவம் தொடர்பாக, மல்லசமுத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



மேலும், தங்கராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த, அவரது மொபைல் ஃபோனை போலீஸார் கைப்பற்றினர். அதில், கடைசியாக பேசிய இரு ஃமொபைல் எண்களுக்குரிய நபர்கள் யார் என விசாரித்தனர். விசாரணையில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸில் பணிபுரியும் செல்வராஜ் (29), அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயக்குமார் (29) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தங்கராஜ், அவரது நண்பர் செல்வராஜூம் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டு வந்துள்ளனர். செல்வராஜை, தங்கராஜ் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். எனவே, நண்பர்கள் ஆலோசனைப்படி, தங்கராஜூவை தீர்த்துக் கட்ட செல்வராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி, சம்பவ தினமான 9ம் தேதி இரவு, உப்புக்கரடு மலைக்கு தங்கராஜை செல்வராஜ் வரவழைத்துள்ளார். அங்கு, செல்வராஜ், விஜயகுமார் மற்றும் தங்கராஜ் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் இருந்த தங்கராஜின் தலையில் இருவரும் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். அதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us