ADDED : அக் 14, 2011 01:29 AM
ஈரோடு: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ஐந்துநாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடம், எஃப்.எல்.-2, எஃப்.எல்.-3, எஃப்.எல்.-4ஏ ஆகிய பார் உரிமத்தலங்கள், 15ம் தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 21ம் தேதி முழுவதும் மூடி வைக்கப்படும். இத்தகவலை கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


