Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தூய்மை கிராமமாக மாற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

தூய்மை கிராமமாக மாற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

தூய்மை கிராமமாக மாற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

தூய்மை கிராமமாக மாற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

ADDED : அக் 08, 2011 11:14 PM


Google News

அருப்புக்கோட்டை : ''தூய்மை கிராமமாக மாற்றுவேன்,'' என, அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ஊராட்சி தலைவர் வேட்பாளர் ஜெ.

திருமால் தனலிங்கம் கூறினார். பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது: ஊராட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல, கல்வியாளர்கள், ஓய்வு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் கொண்ட கமிட்டி உருவாக்கி, அவர்களின் ஆலோசனை படி ஊராட்சியை வழி நடத்தப்படும். தூய்மையான கிராமம் என்ற விருதைபெற முயற்சி செய்வேன்.வார்டுதோறும் குறை தீர் புகார் பெட்டி அமைக்கப்படும். சந்தை உருவாக்கப்படும். நடைபாதையுடன் பூங்கா அமைக்கப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். அதிக மரம் வளர்க்கப்படும். தரமான ரோடு, மேல்நிலை பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us