/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சொத்து கணக்கு காட்டாதவர்கள் போட்டியிட தடை விதிக்க மனுசொத்து கணக்கு காட்டாதவர்கள் போட்டியிட தடை விதிக்க மனு
சொத்து கணக்கு காட்டாதவர்கள் போட்டியிட தடை விதிக்க மனு
சொத்து கணக்கு காட்டாதவர்கள் போட்டியிட தடை விதிக்க மனு
சொத்து கணக்கு காட்டாதவர்கள் போட்டியிட தடை விதிக்க மனு
ADDED : அக் 05, 2011 10:27 PM
திருப்பூர் : உள்ளாட்சி பதவியில் இருந்த நிர்வாகிகள்,
அரசு உத்தரவுப்படி, இதுவரை சொத்து கணக்கு காட்டாமல் இருந்தால், அவர்கள்
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் உள்ளாட்சி துறை கடந்த 99ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவியில் இருப்போர் ஆண்டுதோறும் மார்ச்
31ம் தேதி தங்களது சொத்து விவரங்களை முறையாக அரசுக்கு சமர்ப்பிக்க
வேண்டும். ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற
கூட்டத்திலும், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் தலைவர் ஒன்றிய கூட்டத்திலும்,
பேரூராட்சி, நகராட்சி கவுன்சிலர், தலைவர் மற்றும் மேயர்கள், அந்தந்த மன்ற
கூட்டத்திலும் சொத்து விபரங்களை சமர்ப்பித்து, அதன் நகலை கலெக்டர் மூலம்
அரசுக்கு அனுப்ப வேண்டும்.
கடந்த 2006 முதல் 2011 வரை உள்ளாட்சி அமைப்பில் பதவி வகித்தவர்களில் 70
சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சொத்து கணக்கை சமர்ப்பிக்கவில்லை.
பெரும்பாலானோர் மீண்டும் தேர்தலில் போட்டி
யிடுகின்றனர்.
இதுகுறித்து குன்னத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்வேல், கலெக்டர்
அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அதில், 'உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிடும், முந்தைய பதவிக்காலத்தில் உள்ளாட்சி பதவி வகித்த, சொத்து
கணக்கு காட்டாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், தேர்தல் தொடர்பான முக்கிய
கோரிக்கை என்பதால், தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
அதில் தெரிவித்துள்ளார்.


