ADDED : ஜூலை 14, 2011 11:33 PM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி ஒன்றியம் சின்னபொம்மரசனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி ஆசிரியர்கள் நன்கொடை மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜோஸ்பின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முனுசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 70 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர் வெங்கடசாமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் பாஸ்கர், பாரதி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


