/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆண்கள் மட்டுமேபங்கேற்கும் விழா போதைக்கு தடாஆண்கள் மட்டுமேபங்கேற்கும் விழா போதைக்கு தடா
ஆண்கள் மட்டுமேபங்கேற்கும் விழா போதைக்கு தடா
ஆண்கள் மட்டுமேபங்கேற்கும் விழா போதைக்கு தடா
ஆண்கள் மட்டுமேபங்கேற்கும் விழா போதைக்கு தடா
ADDED : ஆக 06, 2011 10:54 PM
வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயிலில், 4,000 க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன.
இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை முடிந்த இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு, விழா
நடக்கும். நேற்று முன் தினம் நடந்த விழாவில், நேர்ந்து விடப்பட்ட ஆடு,
கோழிகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. தோரணம், ஒலி
பெருக்கி, கலை நிகழ்ச்சிகள் இன்றி 50 ஆண்டுக்கும் மேலாக விழா நடத்தி
வருகின்றனர். இதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். யாரும் மது
அருந்துவது இல்லை. மிச்சமாகும் இறைச்சியை கோயிலில் புதைத்து விடுவர்.
இவ்விழாவில் மதுரை, கோவை, தேனி, சிவகங்கை, விருதுநகர், கரூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.


