நாகர்கோவில் மாணவிகள் மதுரையில் மீட்பு
நாகர்கோவில் மாணவிகள் மதுரையில் மீட்பு
நாகர்கோவில் மாணவிகள் மதுரையில் மீட்பு
ADDED : ஆக 28, 2011 04:33 AM
நாகர்கோவில்:நாகர்கோவிலில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்குசெல்லாமல் காணாமல் போன மாணவிகள்மதுரையில் மீட்கப்பட்டனர்.நாகர்கோவில் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நான்குபேர், நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாத தால், அவர்களது பெற்றோர்கள்போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில், நான்குமாணவிகளும் பள்ளி சீருடையுடன் மதுரைபஸ்சில் ஏறிச்சென்ற விபரம் தெரிய வந்தது.
நாகர்கோவில் போலீசார் மதுரை போலீசாருக்குதகவல் கொடுத்தனர். இந்நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு மாணவிகளையும் போலீசார்மீட்டு, நாகர்கோவில் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். அவர்கள் மாணவிகளின் உறவினர் களுடன் சென்று மாணவிகளை மீட்டு வந்தனர்.ஆசிரியை திட்டியதால் நான்கு பேரும் வீட்டுக்கு செல்லாமல் மதுரை சென்றதாகதெரிவித்துள்ளனர்.


