2014-15ல் டைட்டன் வருமானம் அதிகரிக்கும்
2014-15ல் டைட்டன் வருமானம் அதிகரிக்கும்
2014-15ல் டைட்டன் வருமானம் அதிகரிக்கும்
ADDED : ஆக 28, 2011 12:05 PM
புதுடில்லி : டாடா குழும நிறுவனமான டைட்டனின் ஆண்டு வருமானம் 2014-15ம் நிதியாண்டில் வாட்ச் விற்பனை மூலம் ரூ.3,500 கோடியாக அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய டிசைன்கள் மற்றும் வியாபார விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வருமானத்தை அதிகரிக்க உள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று பல்வேறு கிளை பிரிவுகளின் கீழ் 177 மையங்களுடன் தனது கண்ணாடி தொழிலையும் விரிவுபடுத்த டைட்டன் தீர்மானித்துள்ளது.


