ADDED : செப் 24, 2011 11:32 PM
பெங்களூரு : பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலிருந்து டோடகண்ணணனேஹல்லி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் மர்ம பை ஒன்று இருந்ததையடுத்து அது வெடிகுண்டாக இருக்குமோ என்று மக்களிடையே பீதி கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் விரைந்தனர். விசாரணையின் முடிவில், அது புரளி என தெரிய வந்தது. இதனையடுத்து மக்கள் பெருமூச்சு விட்டனர்.


