Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் சக பயணிகள் தாக்கியதில் கொலை

பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் சக பயணிகள் தாக்கியதில் கொலை

பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் சக பயணிகள் தாக்கியதில் கொலை

பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் சக பயணிகள் தாக்கியதில் கொலை

ADDED : அக் 12, 2011 12:06 AM


Google News

பெரும்பாவூர் : கேரள மாநில அரசு பஸ்சில் பயணம் செய்த சக பயணியிடம், பிக்பாக்கெட் அடித்த பயணியை பஸ்சில் இருந்தவர்கள் கடுமையாக தாக்கியதால் கொலையானார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், இரு பயணிகளை நேற்று கைது செய்தனர்.



கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து, சடையமங்கலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில், மூவாற்றுப்புழா பகுதிக்கு சந்தோஷ் என்பவரும், அவருக்கு அருகே பாலக்காடு மாவட்டம் பெருவும்பு பகுதியைச் சேர்ந்த ரகு, 40, என்பவர் பயணித்தார். இவர் பெரும்பாவூர் அடுத்த, காராட்டு வள்ளிக்கராவில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படும் அச்சு (மோல்டிங்) தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். பஸ் பெரும்பாவூர் வந்ததும், சந்தோஷ் பையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் காணவில்லை என்று அலறினார். இதை தொடர்ந்து பஸ் பயணிகள் அதிர்ச்சியடைந்து, ஒவ்வொருவராக சோதனையிட்டனர். சோதனையில், ரகுவின் சட்டை பையிலிருந்து காணாமல் போன பணம் கிடைத்தது. இதையடுத்து, பயணிகள் அவரை சகட்டுமேனிக்கு தாக்கினர்.



இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று பயணிகளை சமாதானப்படுத்தி, காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரகுவை, தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும், லோக்சபா எம்.பி.,கே.திவாகரனின் பாதுகாப்பு பணியில் உள்ளவர் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us