Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இடமாறுதல் கவுன்சிலிங் உடனே நடத்த வேண்டும் முதல்வருக்கு நாளை தந்தி அனுப்பும் போராட்டம்

இடமாறுதல் கவுன்சிலிங் உடனே நடத்த வேண்டும் முதல்வருக்கு நாளை தந்தி அனுப்பும் போராட்டம்

இடமாறுதல் கவுன்சிலிங் உடனே நடத்த வேண்டும் முதல்வருக்கு நாளை தந்தி அனுப்பும் போராட்டம்

இடமாறுதல் கவுன்சிலிங் உடனே நடத்த வேண்டும் முதல்வருக்கு நாளை தந்தி அனுப்பும் போராட்டம்

ADDED : ஜூலை 26, 2011 01:40 AM


Google News

திருநெல்வேலி : தமிழகத்தில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த கோரி நாளை (27ம் தேதி) தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க மாறுதல் கவுன்சிலிங் முறையை அமல்படுத்தி பெருவாரியான ஆசிரியர்கள் 2011-12ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.இப்பள்ளிகளில் ஏற்படும் பணியிடங்களை சேர்த்து பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை (27ம் தேதி) அனைத்து முதுகலை ஆசிரியர்கள் தமிழக முதல்வர், கல்வித் துறை செயலாளருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.



மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டடு வரும் பள்ளிகளிலும் கிராமப்புற பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கலை பாடங்கள் தொடங்க ஏதுவாக தமிழ் உட்பட 9 பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை அரசாணை 720ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஒரு நபர் குழு அறிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேல்நிலைக் கல்வி தரத்தை மேலும் மேம்படுத்த மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.1.6.2006ல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். 90-91ம் ஆண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு காலத்தை எடுத்து கொண்டு பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுசம்பந்தமாக திருச்சியில் நடந்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாவட்ட தலைவர் சேதுராஜ், செயலாளர் மனோகரன் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us