/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்புவிஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு
விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு
விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு
விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 13, 2011 11:48 PM
சிதம்பரம்: சிதம்பரம் 53 அடி உயர விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷ்ண விழா நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சிதம்பரம் - கடலூர் மெயில் ரோட்டில் லால்புரத்தில் 53 அடி உயர விஸ்வரூப மகா காளியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள காளியம்மன் வண்ணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று காலை சம்ப்ரோஷணம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அனுக்ஞை, மகாசங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து 9.15 மணிக்கு விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷணம் நடந்தது. தங்க சபாபதி தீட்சிதர் பூஜை நடத்தினார்.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


