/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதிகன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி
கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி
கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி
கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி
குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் மக்களின் கோரிக்கை, நிபந்தனைக்குட்பட்டு நிர்வாகம் 'பச்சைக் கொடி' காட்டியுள்ளது.
திரளாக பங்கேற்ற மக்கள், கிராம தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். 'சில வார்டு உறுப்பினர்கள் வார்டு பக்கம் தலை காட்டுவதே இல்லை' என குற்றம் சாடினர். பட்டா வீட்டை விற்க கன்டோன்மென்ட் நிர்வாகம் தடையில்லா சான்று வழங்க நிர்வாகத்தினர் காலம் தாழ்த்த கூடாது; பல மடங்கு அதிகமாக விதிக்கப்பட்டுள்ள வீட்டு வரியை குறைக்க வேண்டும்; கட்டட வரைமுறை விதியை தளர்த்த வேண்டும்; வீடுகளையொட்டி சொந்த நிலத்தில் கழிவறை, மாட்டுக் கொட்டகை கட்ட அனுமதிக்க வேண்டும்; வாரம் ஒரு முறை மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்,' என தெரிவித்தனர். இரு நாளுக்கு முன் நடந்த கன்டோன்மென்ட் போர்டு கூட்டத்தில், போர்டு தலைவர். பிரிகேடியர் ஜாதவ் கவனத்துக்கு மக்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து துணை தலைவர் பாரதியார் கூறுகையில், ''வீட்டு பட்டாவுக்கு தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை; மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்து, குன்னூர் சார் பதிவாளர் மூலம் பெயர் மாற்றிக் கொள்ளலாம். தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அதிகபட்சம் 25 சதுர அடி பரப்பளவுக்கு கழிவறை, 100 சதுர அடிக்கு மிகாமல் மாட்டு கொட்டகைகளை அமைத்து பயன்படுத்தி மேம்பாடு அடையலாம் என போர்டு தலைவர் தன்னிடம் உறுதியளித்துள்ளார். ,'' என்றார்.
செலவு ரூ.42 கோடி: வரவு ரூ.4 கோடி..!


