Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில்வே சுரங்கப்பாதை பணி 16ம் தேதி துவக்கம்மூன்று துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு

ரயில்வே சுரங்கப்பாதை பணி 16ம் தேதி துவக்கம்மூன்று துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு

ரயில்வே சுரங்கப்பாதை பணி 16ம் தேதி துவக்கம்மூன்று துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு

ரயில்வே சுரங்கப்பாதை பணி 16ம் தேதி துவக்கம்மூன்று துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு

ADDED : செப் 07, 2011 11:01 PM


Google News
கடலூர்:கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை வரும் 16ம் தேதி அமைச்சர் சம்பத் துவக்கி வைக்கிறார். அதனையொட்டி இன்று மூன்று அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.கடலூர் நகரின் பிரதான சாலையான லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தன.அதனையேற்ற தமிழக அரசு ரயில்வே சுரங்கப்பாதை திட்டப் பணியை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் 22.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ரயில்வே நிர்வாகம் 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு டெண்டர் விட்டது.நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுரங்கப் பாதைக்கான இணைப்புச் சாலை அமைக்கும் பணிக்கு 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி டெண்டர் அறிவித்தது.

இந்நிலையில் வியாபாரிகள் சங்கச் செயலர் ஜெயபால் இத்திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை உத்தரவு பெற்றார். இந்த மனு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் ரயில்வே சுரங்கப்பாதை பணி விரைவில் துவங்கப்படும் என அமைச்சர் சம்பத் கூறினார்.அதன்படி முதல் கட்டமாக ரயில்வே சுரங்கப்பாதை அமையும் இடத்தில் உள்ள நகராட்சி குடிநீர் குழாய்களை அகற்றும் பணியை வரும் 16ம் தேதி காலை 9 மணிக்கு அமைச்சர் சம்பத் துவங்கி வைக்கிறார்.அதனையொட்டி சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை அகற்றி வேறு இடத்தில் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழுவினர் இன்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us