Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

ADDED : ஜூலை 25, 2011 11:56 PM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, திருப்பாசூரை சேர்ந்தவர் பிரேம், 21.

இவர் 2006ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சரவணனை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.தற்போது கீழானூர் கிராமத்தில் தங்கியிருக்கும் இவர், அங்கு வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தியும், அடிதடியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் என, பல வழக்குகள் உள்ளது.எனவே இவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய, தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் திருவள்ளூர் எஸ்.பி.,வனிதாவிடம் பரிந்துரை செய்தார். எஸ்.பி., பரிந்துரையின்படி, பிரேமை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் அஷிஷ் சட்டர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us