/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணைஇளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
இளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
இளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
இளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
திண்டிவனம் : இளம்பெண் தற்கொலை குறித்து ஆர்.
டி.ஓ., விசாரணை நடத்தப்படுகிறது. திண்டிவனம் அடுத்த அண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் வஜ்ரவேலு, 35. கடலூர் மாவட்டம் தாழஞ்சாவடியைச் சேர்ந்த பொன்முடி மகள் ஹேமலதா,28. இருவருக்கும் கடந்தாண்டு ஜன. 22 ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக கணவரின் அண்ணன் மனோகர் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வரதட்சணை கேட்டு வற்புறுத்துவதாக ஹேமலதா தாய் வீட்டினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹேமலதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொன்முடிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஹேமலதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.தகவலறிந்த டி.எஸ். பி., குப்புசாமி நேரில் சென்று விசாரனை செய்தார். திருமணமான இரு ஆண்டுக்குள் ஹேமலதா இறந்ததால் ஆர். டி.ஓ., செம்புக்குட்டி விசாரணை மேற்கொண்டார்.