ADDED : ஆக 03, 2011 01:42 AM
திட்டக்குடி : ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவட்டத்துறை தீர்த்தப்புரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் உள்ள தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மாலை சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. பின் மலர் அலங்காரத்துடன் சுவாமி தேரோட்டம் நடந்தது. ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விழாவில் பங்கு கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


