Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிராமங்களுக்கு இரவில் இயக்கப்பட்ட பஸ் ரத்து

கிராமங்களுக்கு இரவில் இயக்கப்பட்ட பஸ் ரத்து

கிராமங்களுக்கு இரவில் இயக்கப்பட்ட பஸ் ரத்து

கிராமங்களுக்கு இரவில் இயக்கப்பட்ட பஸ் ரத்து

ADDED : ஆக 11, 2011 01:01 AM


Google News

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து கிராமங்களுக்கு இரவில் இயக்கப்பட்ட தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளியூர்களிலிருந்து வருவோர் பஸ் ஸ்டாண்டில் இரவு முழுவதும் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

முதுகுளத்தூரிலிருந்து சிக்கல், ஆப்பனூர், அபிராமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல மாலை 6 மணி பஸ்சை விட்டால் வேறு பஸ்கள் இல்லை. மேற்கண்ட ஊர்களுக்கு இரவு 10.30 மணி வரை சென்ற தனியார் பஸ்கள் ரத்து செய்யபட்டுள்ளதால், மறுநாள் காலை வரை இப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், பொதுமக்கள், மாணவர்கள் முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆப்பனூர், பூக்குளம், இளஞ்செம்பூர், ஆணைசேரி, கீரனூர் உட்பட பல கிராமங்களுக்கு இரவு 10.30 மணி வரை பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us