Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டூவீலர் மீது "பொலிரோ கார்' மோதி விபத்து: இருவர் பலி

டூவீலர் மீது "பொலிரோ கார்' மோதி விபத்து: இருவர் பலி

டூவீலர் மீது "பொலிரோ கார்' மோதி விபத்து: இருவர் பலி

டூவீலர் மீது "பொலிரோ கார்' மோதி விபத்து: இருவர் பலி

ADDED : ஆக 11, 2011 01:02 AM


Google News

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே கார் மீது டூவீலர் மோதி விபத்திற்குள்ளானதில்,புது மாப்பிள்ளை உட்பட இருவர் பலியாகினர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாராத்தூரை சேர்ந்த பெரியம்பலம் மகன் கார்த்தீஸ்வரன் (32). இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. சிவன்தாரேந்தலை சேர்ந்த ராமசாமி மகன் கோபால் (45). இருவரும், கடந்த 9ம் தேதி ஹீரோஹோண்டா டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஆண்டிச்சியூரணிக்கு விருந்துக்கு சென்றனர். அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு, காளையார்கோவில் வந்தனர். சூசையப்பர்பட்டிணம் விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 'பொலிரோ' கார் டூவீலர் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளையார்கோவில் போலீசார், கார் டிரைவர் தேவகோட்டை பொன்னம்பலத்தை(53) கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us