Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்

காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்

காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்

காமன்வெல்த் ஊழல்: தலைமறைவான இருவர் சி.பி.ஐ., கோர்ட்டில் சரண்

ADDED : ஆக 17, 2011 01:31 AM


Google News

புதுடில்லி : காமன்வெல்த் ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

காமன்வெல்த் போட்டியின் போது ஸ்கோர் போர்டு மற்றும் நேரம் காட்டும் கருவிகள் பொருத்தும் பணி, சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணிக்கு துணை ஒப்பந்ததாரர்களாக உத்தர பிரதேச மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த புரு÷ஷாத்தம் ஆரியா, ஏ.கே.மதன் ஆகியோர் இருந்தனர். குறைந்த விலையில் இந்த பணியை செய்து முடிக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்த நிலையில், அதிக தொகைக்கு 'ஸ்விஸ் டைமிங்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ., தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.



இந்த ஊழலில், பரிதாபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர்கள் புரு÷ஷாத்தம் ஆரியா, ஏ.கே.மதன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களை சி.பி.ஐ., தேடி வந்தது. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால், அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ., கோர்ட் அறிவித்தது. இதற்கிடையே, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருந்தது.



இருவருக்கும் முன் ஜாமின் அளிக்க, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில், ஆரியாவும், மதனும் டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை கோர்ட் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இவர்களுக்கு தேவையான மருந்துகளை அளிக்க சிறை நிர்வாகத்தை கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us