/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பென்ஷனர் கூட்டமைப்பு வங்கிக் கடன் கோரிக்கைபென்ஷனர் கூட்டமைப்பு வங்கிக் கடன் கோரிக்கை
பென்ஷனர் கூட்டமைப்பு வங்கிக் கடன் கோரிக்கை
பென்ஷனர் கூட்டமைப்பு வங்கிக் கடன் கோரிக்கை
பென்ஷனர் கூட்டமைப்பு வங்கிக் கடன் கோரிக்கை
ADDED : ஆக 26, 2011 12:10 AM
கடலூர் : வங்கிகள் தங்களுக்கு கடன் தர வேண்டுமென மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடலூரில் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். ராமலிங்கம், சிவக்குமார், கேசவன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கலியபெருமாள், பக்கிரி, ராமசாமி, சுப்ரமணியன், ராமசாமி, தண்டபாணி, ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர். மறுக்கப்பட்டுள்ள 2006ம் ஆண்டுக்கான பணப்பலனை தர வேண்டும். வங்கிகள் கடன் தர வேண்டும். மருந்துகளின் விலையேற்றத்திற்கு ஏற்ப மருத்துவப் படியாக 300 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.
தீனதயாளன் நன்றி கூறினார்.


