/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு :தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழப்புதேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு :தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழப்பு
தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு :தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழப்பு
தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு :தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழப்பு
தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு :தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழப்பு
ADDED : ஆக 29, 2011 12:06 AM
வால்பாறை : வால்பாறையில் தேயிலை செடியை தாக்கும் கொப்பள நோயினால்
ஆயிரக்கணக்கான தேயிலை செடிகள் சேதமடைந்துள்ள நிலையில், தேயிலை
உற்பத்தியும் பாதிக்கப்பட்டு தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தென்மாநிலங்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 740 ஹெக்டேர் பரப்பளவிலும்,
தமிழகத்தில் 80 ஆயிரத்து 462 ஹெக்டர் பரப்பளவிலும், வால்பாறையில் மட்டும்
12 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் சிறிய, பெரிய தேயிலை, காபி,
ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.எஸ்டேட்டுகளில் 80 சதவீதம்
தேயிலை பயிரிடப்பட்டுள்ள நிலையில் தேயிலை தொழிலை நம்பி 50 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும்
தேயிலை தூள் கோவை, குன்னூர், கொச்சி போன்ற ஏலமையத்திற்கு கொண்டு
செல்லப்படுகின்றன. இது தவிர வெளிநாடுகளுக்கு உயர்ரக தேயிலை தூள் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. தற்போது வால்பாறையில் தயாரிக்கப்படும் தரமான தேயிலை
தூள் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை
செய்யப்படுகிறது. இது தவிர ஒரு சில எஸ்டேட்டுகளில் மட்டுமே
தயாரிக்கப்படும் 'ஆர்கானிக்' என்ற உயர்ரக தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு
ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை
தொடர்ந்து பெய்து வருவதால் எஸ்டேட்டுகளில் தேயிலை உற்பத்தி வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இங்குள்ள பெரும்பாலான தேயிலை
எஸ்டேட்டுகளில் 'கொப்பள நோய்' தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு,
தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான தேயிலை
செடிகள் கருகிப்போயுள்ளன. நோய் தாக்குதல் அதிகமாக வாய்ப்புஉபாசி தேயிலை
ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:வால்பாறையில் தற்போது நிலவி வரும் சீதோஷ்ண
நிலை மாற்றத்தால் தேயிலை செடி 'கொப்பள நோய்' தாக்குதலால்
பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக
பெய்துவருவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகமாக வாய்ப்புள்ளது. இதை தடுக்க
'காப்பர் ஆக்சி குளோரைடு, ஹெக்சாகோளசால் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளை
தெளித்து, நோய்களை கட்டுப்படுத்தலாம் என்றனர்.


