/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்புதேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
ADDED : செப் 06, 2011 10:11 PM
கடலூர் : தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சி.இ.ஓ., அலுவலக செய்திக்குறிப்பு: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது.
7ம் வகுப்பில் 55 சதவீத (எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம்) மதிப்பெண் பெற்று தற்போது 8ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒன்னரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, இந்த காலக்கெடு வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. ஆகவே தலைமை ஆசிரியர்கள், தகுதி உள்ள மாணவர்களிடம் இருந்த விண்ணப்பங்களை பெற்று அதற்குரிய தேர்வு கட்டணத்தை ஒரே சலானில் செலுத்தி விண்ணப்பங்களுடன் வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


