/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் தேர்தல் திருவிழா கனஜோர்வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் தேர்தல் திருவிழா கனஜோர்
வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் தேர்தல் திருவிழா கனஜோர்
வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் தேர்தல் திருவிழா கனஜோர்
வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் தேர்தல் திருவிழா கனஜோர்
ADDED : அக் 03, 2011 10:56 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசியல் கட்சி வேட்பாளர்கள், தொண்டர்கள் புடை சூழ, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 252 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 633 ஊராட்சி தலைவர்கள், 4,617 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 8 நகராட்சி தலைவர்கள், 249 நகராட்சி உறுப்பினர்கள், 18 பேரூராட்சி தலைவர்கள், 297 பேரூராட்சி உறுப்பினர்கள், ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இவற்றுக்கான மனு தாக்கல் 22ம் தேதி துவங்கி, 29ம் தேதி நிறைவு பெற்றது.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 198 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,776 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 3,726 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 17 ஆயிரத்து 538 பேர், நகராட்சி தலைவர் பதவிக்கு 111 பேர், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,054 பேர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 183 பேர், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 1,830 பேர், என மொத்தம் 27 ஆயிரத்து 416 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 30ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான மனுக்களில், மூன்று மனுக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மனுக்களில், 38 மனுக்கள், ஊராட்சி தலைவர்களுக்கான மனுக்களில், 28 மனுக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மனுக்களில் 182 மனுக்கள், நகராட்சி தலைவர்களுக்கான மனுக்களில், இரண்டு மனுக்கள், நகராட்சி உறுப்பினர்களுக்கான மனுக்களில், 32 மனுக்கள், பேரூராட்சி தலைவர்களுக்கான மனுக்களில், ஐந்து மனுக்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மனுக்களில், 62 மனுக்கள், என மொத்தம் 352 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.நேற்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அரசியல் கட்சி மாற்று வேட்பாளர்கள் நேற்று தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டதால், அரசியல் கட்சியின் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், பேண்டுவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, வீடு வீடாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், திறந்த ஜீப்பில் வார்டு வாரியாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மேள சத்தமும், கோஷங்களும் கேட்டபடி உள்ளது.


