ADDED : அக் 13, 2011 05:31 AM
தூத்துக்குடி:தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் கலந்து கொள்ள குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் வரும் 16ம் தேதி தேசிய அளவிலான
ஜூனியர் லெவல் ஸ்குவாஷ் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில் கலந்து கொள்ள
குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியின் மாணவ, மாணவிகளான ஆண்டோனிஷா, ராகுல் அருண்,
ஜேக்வயாஸ் மற்றும்அகிலன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில்
கலந்து கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளை மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி
ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை கல்விகுழுமத் தலைவர் கிளிட்டஸ்பாபு, விளையாட்டு
ஆலோசகர் மனோகரன்சாமுவேல், பள்ளி முதல்வர் பிரடெரிக்சாம் மற்றும் பள்ளி
ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டினர்.


