/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொங்கு முன்னணி கூட்டத்தில் தீர்மானம்அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொங்கு முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொங்கு முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொங்கு முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொங்கு முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 04, 2011 12:29 AM
கோபிசெட்டிபாளையம்: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு முழு ஆதரவு அளிப்பது என, கொங்கு நாடு முன்னேற்ற முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கொங்கு நாடு முன்னேற்ற முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம், கோபியில் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல். கொங்கு மண்டலத்தில் தீராத பிரச்னையான திருப்பூர் சாயக் கழிவு பிரச்னைக்கு உரிய தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தல். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பாடுபட்டதைபோல், உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது செயலாளர் மாணிக்கவாசகம், பொருளாளர் சுதானந்த், அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


