/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கலந்தாய்வுடாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கலந்தாய்வு
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கலந்தாய்வு
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கலந்தாய்வு
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கலந்தாய்வு
ADDED : செப் 06, 2011 10:32 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பழனி, செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பாலுசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தல், சங்கத்தின் சார்பில் டாஸ்மாக் துறை அமைச்சரை அழைத்து மாநில அளவிலான மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


