Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வணிக வளாகத்தில் திருட்டு

வணிக வளாகத்தில் திருட்டு

வணிக வளாகத்தில் திருட்டு

வணிக வளாகத்தில் திருட்டு

ADDED : செப் 08, 2011 02:05 AM


Google News

பொள்ளாச்சி : வணிக வளாகத்திலுள்ள கடைகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில், நேற்று முன்தினம் காலை மகேந்திரன் என்பவரின் சலூன் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ராஜன் (36) என்பவரின் போட்டோ ஸ்டுடியோ, பைனான்ஸ் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. போலீசார் கடையின் ஷட்டர் திறக்கப்பட்டு ஆய்வு செய்தனர். சலூன் கடையில் இருந்து ஹீட்டர், சேவிங் டிம்மர் மிஷின்கள் திருடப்பட்டிருந்தது. போட்டோ ஸ்டுடியோவில் இருந்து இரண்டு டிஜிட்டல் காமிரா, 2 சாதாரண காமிரா, போட்டோ பிளாஷ் குடைகள் திருட்டு போயிருந்தது. பைனான்ஸ் கடையில் கால்குலேட்டர் போன்ற பொருட்கள் மட்டும் திருட்டு போயிருந்தது. கடைகளின் ஷட்டர், டேபிள்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். இதுபற்றி கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடைகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us