ADDED : செப் 03, 2011 11:26 PM
கோத்தகிரி : கோத்தகிரி ஈளாடா காந்தி நகரில் விழுதுகள் ஆண்கள் சுய உதவிக்குழு துவக்கப்பட்டது.
ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அருவி அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஊக்குனராக சுரேஷ், பிரதிநிதிகளாக நாகராஜ், சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், ஈளாடா காந்தி நகரில் உள்ள தண்ணீர் தேக்க தொட்டியை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றி, பராமரிப்பு பணியை அருவி அறக்கட்டளை மூலம் மேற்கொள்வது; கிராமத்தில் எரியாத தெருவிளக்குகளை சரி செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணேசன் நன்றி கூறினார்.


