Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

ADDED : செப் 16, 2011 12:05 AM


Google News

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே வாய்தகராறில் பெண்ணை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம் அடுத்த தேவர் முக்குளத்தை சேர்ந்தவர் ஜோதி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சிவசுந்தரம். ஜோதி வீட்டை பெருக்கி குப்பையை சிவசுந்தரம் வீட்டருகே கொட்டியுள்ளார். இதை சிவசுந்தரம் கண்டித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சிவசுந்தரம், ஜோதியை தாக்கினார். இதில், காயமடைந்த அவர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காவேரிப்பட்டணம் போலீஸார் சிவசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us