கட்சி கொடியை அகற்ற கலெக்டர் உத்தரவு - தே.மு.தி.க. நிர்வாகிகள் முற்றுகை
கட்சி கொடியை அகற்ற கலெக்டர் உத்தரவு - தே.மு.தி.க. நிர்வாகிகள் முற்றுகை
கட்சி கொடியை அகற்ற கலெக்டர் உத்தரவு - தே.மு.தி.க. நிர்வாகிகள் முற்றுகை
UPDATED : அக் 06, 2011 12:56 PM
ADDED : அக் 06, 2011 12:46 PM
ஆத்தூர்: ஆத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி தே.மு.தி.க.
கட்சி கொடிகள் கட்டியதை அறித்த கலெக்டர், உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் கலெக்டரை முற்றுகையிட்டனர். ஆத்தூர் ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா இன்று மதியம் பிரசாரம் செய்ய வரவுள்ளளார். இதற்காக கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலகம் எதிரே கட்சி கொடி , தோரணங்களை கட்டியிருந்தனர். அப்பகுதிக்கு ஆய்வு நடத்த வந்த கலெக்டர் மகரபூஷ்னம் , இதனை பார்த்து ஆத்திரமடைந்து அதிகாரிகளை அழைத்து உடனடியாக கட்சி கொடி தோரணங்களை அகற்ற உத்தரவிட்டார். அதிகாரிகளும் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


